Sunday, June 17, 2012
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.
ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
Sunday, June 3, 2012
அரசுப் பள்ளிகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம்
தமிழக அரசு மேம்பாட்டு நடவடிக்கையால் அதை அரசு
பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனியார்
பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த
ஆண்டு முதல் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள மாநகராட்சி அரசுப்
பள்ளிகளிலும், புறநகர் பகுதியிலுள்ள பள்ளிகளிலும் எந்த ஆண்டிலும் இல்லாத
வகையில் இந்த ஆண்டு மாணவர்களின் கோரிக்கை அதிகமாக உள்ளது. நேற்று பள்ளிகள்
திறந்த முதல் நாளிலேயே ஏராளமான புதிய மாணவர்கள் சேர்க்கைக்காக அலுவலகம்
முன்பு குவிந்துகிடந்தனர்.
குறிப்பாக 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகியுள்ளது. இது குறித்து கூடுவாஞ்சேரி ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது பிள்யைச் சேர்க்க வந்த ஜி.ஜெயந்தி கூறுகையில் நாங்கள் சாதாரண நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். சென்ற ஆண்டை விட தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தி விட்டனர்.
எங்களுக்கு கல்வி தான் பெரிது. அதிக அளவில் கட்டணங்களை கட்ட முடியாததால் தனியார் ஆங்கிலப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த எங்கள் பிள்ளையை இந்த பள்ளியில் சேர்க்க வந்துள்ளேன் எனக் கூறினார்.
அதேபோல் பெருங்களத்தூர் அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்க்க வந்த ஜி.ஹரி கிருஷ்ணன் கூறுகையில், தற்போது அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், கட்டணமும் இல்லை. சலுகைகளும் அதிகம். அதனால் தான் எனது மகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க முடிவெடுத்தேன் என்றார்.
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலிருக்கும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை விட பீர்க்கங்கரணைப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் மிகவும் அதிகம். அங்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த 235 மாணவர்களில் 231 பேர் தேர்ச்சி பெற்று அப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மேலும், தனியார் பள்ளிகளை விட அடிப்படை மேம்பாட்டு வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைப்பதால் எங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியிலேயே சேர்க்க முடிவெடுத்து விட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
வண்டலூரைச் சேர்ந்த சுந்தர் கூறுகையில், என்.2 பிள்ளைகளையும் இங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டேன். இதற்கு முன் ஆங்கிலப் பள்ளிகளில் படித்து வந்தனர். ஏராளமாக கல்வி செலவு ஆவதால் என்னால் சமாளிக்க முடியவில்லை. எனவே, இந்த முடிவு எடுத்து விட்டதாகக் கூறினார்.
எப்போது மில்லாத வகையில் இந்த ஆண்டு கேளம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க அதிக அளவில் பெற்றோர் வந்திருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பள்ளியில் ஆங்கில வழியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்க வசதியுள்ளது. கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே.
எனவே எங்கள் குழந்தைகளை இங்கே கொண்டு வந்து சேர்க்க வந்துள்ளதாகக் கூறினார்.
செய்தி : தினபூமி
குறிப்பாக 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகியுள்ளது. இது குறித்து கூடுவாஞ்சேரி ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது பிள்யைச் சேர்க்க வந்த ஜி.ஜெயந்தி கூறுகையில் நாங்கள் சாதாரண நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். சென்ற ஆண்டை விட தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தி விட்டனர்.
எங்களுக்கு கல்வி தான் பெரிது. அதிக அளவில் கட்டணங்களை கட்ட முடியாததால் தனியார் ஆங்கிலப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த எங்கள் பிள்ளையை இந்த பள்ளியில் சேர்க்க வந்துள்ளேன் எனக் கூறினார்.
அதேபோல் பெருங்களத்தூர் அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்க்க வந்த ஜி.ஹரி கிருஷ்ணன் கூறுகையில், தற்போது அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், கட்டணமும் இல்லை. சலுகைகளும் அதிகம். அதனால் தான் எனது மகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க முடிவெடுத்தேன் என்றார்.
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலிருக்கும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை விட பீர்க்கங்கரணைப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் மிகவும் அதிகம். அங்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த 235 மாணவர்களில் 231 பேர் தேர்ச்சி பெற்று அப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மேலும், தனியார் பள்ளிகளை விட அடிப்படை மேம்பாட்டு வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைப்பதால் எங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியிலேயே சேர்க்க முடிவெடுத்து விட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
வண்டலூரைச் சேர்ந்த சுந்தர் கூறுகையில், என்.2 பிள்ளைகளையும் இங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டேன். இதற்கு முன் ஆங்கிலப் பள்ளிகளில் படித்து வந்தனர். ஏராளமாக கல்வி செலவு ஆவதால் என்னால் சமாளிக்க முடியவில்லை. எனவே, இந்த முடிவு எடுத்து விட்டதாகக் கூறினார்.
எப்போது மில்லாத வகையில் இந்த ஆண்டு கேளம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க அதிக அளவில் பெற்றோர் வந்திருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பள்ளியில் ஆங்கில வழியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்க வசதியுள்ளது. கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே.
எனவே எங்கள் குழந்தைகளை இங்கே கொண்டு வந்து சேர்க்க வந்துள்ளதாகக் கூறினார்.
செய்தி : தினபூமி
Saturday, June 2, 2012
ஒரு அறிவிப்பு... {PLEASE SHARE THIS...}
இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு..

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்.....
சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்.....
கண்ணதாசன் ....
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்!
■
கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)