நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Saturday, October 2, 2010

மாற்றம் நமது மானிட தத்துவம் ..
மாற்றம் - ஆம்
இது தான் மானுட மாயை...
மனித தேவை...

மண்ணுள் வீழ்ந்த - விதை
மாறாமல்  இருந்துவிட்டால்...?

சுட்டெரிக்கும் சூரியனை - பூமி
சுற்றாமல் நின்றுவிட்டால்...?

ஆம்பல் நிற அம்புலி - நிதம்
தோன்றாமல் இருந்தால்...?

வற்றாத வான் மழை -  இனி
வராமலே போய்விட்டால்...?

இவற்றிடம் இருப்பது ...?
இனி ...
நம்மிடமும் தேவை ..?
அது..?   தெரியுமே ...