நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Tuesday, October 30, 2012

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !


ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய ஒன்று படியுங்கள், பரப்புங்கள். இந்தியாவின் பெருமையை உலகறியட்டும், நேதாஜியின் பெருமையை நாடறியட்டும் . . .
மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்.



Source : 
Engalukku Dhesa Thanthai Nethaji Thaan

Thursday, October 18, 2012

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?



 

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா…

அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தா ன் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபா ன்மை இனத்தவர் என்ற கா ரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அத னால் இமெயில் காப்புரிமை க்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர், அதன் சார்பில் இந் தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.

நேவார்க் நகர உயர் நிலைப் பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கி டைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில் களை தொடங்கும் வகையிலும் இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணை யாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில் களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய் யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தைhttp://www.inventorofe/ mail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
 
Thanks-Neela.

ஜிமெயிலில் புதிய வசதி Send SMS..!

வணக்கம் நண்பர்களே..!


நாள்தோறும் புத்தம் புதிய வசதிகளையும்,தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் Google நிறுவனத்தின் மற்றுமொரு புதிய அறிமுகம் SEND SMS.

இந்த வசதி Gmailல்  அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த Send SMS வசதியின் மூலம் இனி ஜிமெயிலில் இருந்தவாறே உங்கள் நண்பர்களின் மொபைல்களுக்கு  SMS அனுப்ப முடியும்.

நமக்கு வரும் ரிப்ளை SMS நமது மின்னஞ்சல்களுக்கே வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Gmail மூலம் SMS அனுப்பும் முறை: 


உங்கள் ஜிமெயிலில் லாகின்(login) செய்துகொள்ளுங்கள்.
அதில் வலது பக்கம் இருக்கும் search, chat or send sms என்னும் பெட்டியில் உங்கள் நண்பரின் மொபைல் நம்பரை உள்ளிடுங்கள். மொபைல் எண்ணை உள்ளிடும்போதே உங்களுக்கு சில வசதிகளடங்கிய பெட்டித் தோன்றும். அதில் Send Sms என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

புதியதாக ஒரு செல்போன்உள்ளிடுகிறீர்கள் என்றால்



அதில் send sms என்னும் வசதியைத் கிளிக் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உடனே புதிதாக chat window தோன்றும். அதில் நீங்கள் அனுப்ப வேண்டிய SMS -ஐ தட்டச்சிட்டு அனுப்பலாம். அவர்கள் உங்களுக்கு திரும்ப அனுப்பும் SMSகள் Chat window-வில் ரிப்ளையாக(Reply) வந்துவிடும்.

மற்றுமொரு முறை: 

நீங்கள் Chat window வைத் திறந்துகொள்ளுங்கள். அதில் உள்ள more என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்..

அதில் Send SMS என்னும் வசதியை கிளிக் செய்வதன் மூலம் தோன்று விண்டோவில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை தட்டச்சிட்டு என்டர் செய்தால் உங்கள்

இப்போது அதில் உங்கள் நண்பர்களுடைய மொபைல் நம்பரை தட்டச்சிடுங்கள்.

உடன் இரண்டு வசதிகள் தோன்றும். அதில் send sms என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் உங்கள் நண்பரின் Cell Number தட்டச்சிட்டு Save கொடுத்துக்கொள்ளுங்கள். பிறகு தோன்றும் SMS chat window வில் (பெட்டியில்) அனுப்ப வேண்டிய செய்தியை தட்டச்சிட்டு enter கொடுங்கள்..

உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு நீங்கள் அனுப்பிய செய்தி SMS ஆக சென்று சேர்ந்திருக்கும்.

உங்கள் நண்பர்கள் ஆப்லைனில் இருக்கும்போது தொடர்புகொள்ள இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு Google SMS பெறும் நண்பர்கள் தங்கள் மொபைல் மூலம் அனுப்பும் Reply SMS கள் உங்கள் சாட்விண்டோவில் Reply ஆக வந்துவிடும்.

மொபைலிலிருந்து அனுப்பும் SMS களுக்கு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்களின் கட்டண விதிமுறைகளுக்கு ஏற்ப SMS க்கான கட்டணம் விகிதம் இருக்கும். SMS அனுப்புவதற்கு வசதியாக நீங்கள் பயன்படுத்தும் Mobile Operator நிறுவனங்களின் Planகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


இந்தியாவில் Google SMS வசதியை பெற்றிருக்கும் மொபைல் நிறுவனங்களின் பட்டியல்கள்:

India

Aircel
IDEA
Loop Mobile
MTS
Reliance
Tata DoCoMo
Tata indicom
Vodafone (Delhi, Mumbai, Kolkata, Gujarat, A.P, Bihar, W.B. & A & N, Assam, N.E.)

மற்ற நாடுகளில் இந்த வசதியை மொபைல் நிறுவனங்களின் பட்டியல்:

Country
Mobile Operators
Afghanistan
Afghan Wireless Communication Company
Etisalat
Roshan
Algeria
Movicel telecomunicações, SA.
Unitel
Bahrain
Viva
Zain
Bangladesh
banglalink
Citycell
Benin
ETISALAT Bénin
Botswana
Orange
Cambodia
Cell Card
Smart
Cameroon
MTN
Orange
Congo, Democratic Republic
Airtel
Vodacom
Côte d'Ivoire
MTN
Moov Cote d’Ivoire
Orange
Egypt
Mobinil
Ghana
Airtel
MTN
Tigo
Vodafone
Guam
iConnect Buddy
Guinea
Cellcom Guinea
Orange
Indonesia
AHA
Axis
Esia
Indosat
Telkomsel
Tri
XL
Iraq
Omnea
Zain
Israel
orange
Pelephone
Jordan
Orange
Umniah
Zain
Kazakhstan
Beeline
Kcell
Kenya
Airtel
orange
Safaricom
Yu
Kuwait
Viva
Wataniya
Zain
Kyrgystan
Megacom
Lao
ETL PUBLIC COMPANY
Liberia
Cellcom
Lonestar Cell MTN
Madagascar
Airtel
Telma
Malawi
Airtel
TNM
Malaysia
Celcom
DiGi
Maxis
Maldives
Dhiraagu
Wataniya
Morocco
Inwi
Mozambique
mcel
Vodacom
Niger
Airtel
Moov
Orange
Nigeria
Airtel
Glo
Etisalat
MTN
Starcomms
Visafone
Pakistan
Mobilink
Ufone
Palestinian Territories
Jawwal
Wataniya Mobile
Philippines
Globe
SMART
Sun Cellular
Saudi Arabia
Mobily
STC
Zain
Senegal
orange
Tigo
Seychelles
Airtel
Sierra Leone
Airtel
Comium
Somalia 
Somtel
Telesom
South Africa
8ta
MTN
Sri Lanka
Dialog
Etisalat
Mobitel
Tanzania
Vodacom
Tigo
Thailand
dtac
True Move
Togo
Moov Togo
Tunisia
Orange
Tunisiana
Uganda
Orange
MTN
Uganda Telecom
Ukraine
Intertelecom
United States
All operators
Uzbekistan
Beeline
MTS Uzbekistan
Ucell
Vietnam
VinaPhone
Zambia
Airtel
MTN
Zamtel



நன்றி நண்பர்களே..
தகவலுக்கு  நன்றி - திரு .தங்கம்பழனி

Wednesday, October 17, 2012

PAN explained.......




PAN is a 10 digit alpha numeric number, where the first 5 characters are letters, the next 4 numbers and the last one a letter again.
These 10 characters can be divided in five parts as can be seen below.

The meaning of each number has been explained further.

1. First three characters are alphabetic series running from AAA to ZZZ

2. Fourth character of PAN represents the status of the PAN holder.
• C — Company
• P — Person
• H — HUF(Hindu Undivided Family)
• F — Firm
• A — Association of Persons (AOP)
• T — AOP (Trust)
• B — Body of Individuals (BOI)
• L — Local Authority
• J — Artificial Juridical Person
• G — Government

3. Fifth character represents first character of the PAN holder’s last name/surname.

4. Next four characters are sequential number running from 0001 to 9999.

5. Last character in the PAN is an alphabetic check digit.

Nowadays, the DOI (Date of Issue) of PAN card is mentioned at the right (vertical) hand side of the photo on the PAN card. .........!

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Update sponsored by ★ Gulatii Caterers ★
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

SHARE with ur Friends....
_____________________________________________

ஏடீஸ் எகிப்தி கொசுவின் கொடூரம்...



இந்தியாவில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழை சீசனில்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடீஸ் எகிப்தி வகை கொசுதான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸை மனிதனுக்குப் பரப்புகின்றன. இவை, நாலு வாரங்கள் உயிர் வாழும். அதிகாலை நேரம், மாலை 4 மணி முதல் 7 மணி வரை இந்த வகைக் கொசுக்களுக்கு உணவு நேரம். மனிதனைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும். 2 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லக் கூடியவை. வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் மூடி, மூடப்படாத மேல்நிலை நீர்த்தொட்டிகளில் இனப்பெருக்கம் செய்யும். ஒரு கொசு 150 முட்டைகளை இடும். ஒரு வாரம் நீரில் பல்வேறு பருவங்களாக வளர்ந்து கொசுவாகப் பறக்கும்.

மனிதனுக்கு அருகில் உள்ள நல்லநீர் நிலை தேக்கங்களில்தான் இவை முட்டை இடுகின்றன. 30 மி.லி. பெட்ரோல் அல்லது கெரசினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர்த்தேக்கங்களில் தெளித்தால் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம். இப்படி வாரம் ஒருமுறை செய்து வரவேண்டும். கிணறுகளில் கொசுக்களின் லார்வாக்களை விரும்பிச் சாப்பிடும் சின்ன சின்ன மீன்களை விட்டால் நல்லது.

எனவே, வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தாலே, லார்வா பருவத்திலேயே இந்த வகை கொசு அழியும். நாள்பட்ட தேவையில்லாத பொருட்களை வீட்டின் உள்ளே - வெளியே போட்டு வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, உடல் முழுவதும் மறைக்கும்படியான ஆடைகள் அணிவது, கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச்சுருள் போன்ற கொசு விரட்டிகள் பயன்படுத்தலாம்.

- ஆர்.பி.
ஜூனியர் விகடனில் இருந்து

இணையத்தில் படித்ததில் மிகவும் ரசித்தது...

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

(இணையத்தில் படித்ததில் மிகவும் ரசித்தது..)





thanks Udai...