நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Sunday, March 10, 2013

அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?

அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி? (Department of Employment and Training, Govt. of Tamilnadu)

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் “சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல்,
http://www.tnvelaivaaippu.gov.in/

கணித திறமையை வளர்த்துக் கொள்ள....


http://www.mathplayground.com/images/MP_Logo_Bevel_Purple.gif 
உங்களின் குழந்தைகள் கணிதத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேக இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக
அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்ற தலைப்புகளின் கீழ் கணக்குகள் நிறைய உள்ளன.
கணித விடுகதைகள் எனும் தலைப்பில் பண்ணாங்குழி(Mancala), நகரும் செங்கல்(Sliding Block), சுடோக்கு(Sudoku), மணிச்சட்டம்(Battleship), நாணய எடை(Coin Weighing), கியூப்(Cube), என்பது போன்ற 18 வழிமுறைகளின் கீழ் பல கணக்குகள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் கணக்கு பயிற்சியாளர்(Math Apprentice), கணக்கு பணித்தாள்(Maths Worksheets), மின்னட்டை(Flash Cards) மற்றும் சில தலைப்புகளின் கீழ் விளையாட்டு வழியில் எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும் சிறப்பான இணையதளம் இது.
இணையதள முகவரி: www.mathplayground.com
இந்த இணையதளத்தை பயன்படுத்திய பின், உங்கள் குழந்தைக்கு கணிதத்தில் ஆர்வம் தானாகவே வந்துவிடும்.

பன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா?


புரனவுன்சியேட்டர் (Pronunciator) என்ற இணையதளம் 60க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.பிற மொழியைக் கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்தத் தளம் மாறுபட்டது. நாம் எந்த மொழியைப் பயில விரும்புகிகின்றோமோ, அந்த மொழியை, நம் தாய்மொழியிலிருந்தே கற்கலாம்.

www.pronunciator.com என்ற இத்தளத்திற்குச் சென்று I speak என்பதில் நாம் எந்த மொழி பேசுபவர் அல்லது எந்த மொழியில் இருந்து கற்க விரும்புகின்றோமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் I want to learn கட்டத்திற்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஹீப்ரு, ஸ்பானிஷ் என 60க்கும் மேற்பட்ட உலக மொழிகள், நம் நாட்டு மொழிகள் இருக்கும். எந்த மொழி கற்க விரும்புகின்றோமோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சொற்கள் தொகுப்பு, முக்கிய வினைச்சொற்கள், எளிய சொற்றொடர்கள், சுற்றுலா பயணிகளுக்கான சொற்றொடர்கள், உரையாடல்கள் என 5 பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் 1,000க்கும் மேற்பட்ட பயிற்சிகளும், பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்தையும் அது வார்த்தைக்கு வார்த்தை அழகாக சொல்லிக் கொடுக்கிறது. கற்றுத்தரும் வார்த்தைகள் தேர்வு செய்த மொழியிலும், ஆங்கிலத்திலும் வரும்.

உதாரணமாக, நாம் தமிழ் மொழியிலிருந்து, பிரெஞ்ச் மொழி பயிலுகின்றோம் என்றால்,Bonjour (வணக்கம்)Excusez - moi (என்னை மன்னியுங்கள்)
Silvous plait (தயவு செய்து) என வரும். கூடவே கார்ட்டூன் படமும் நமக்கு செய்கை மூலம் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை அழகாக விளக்கிக் காட்டுகிறது. அதனால், புரிந்துகொள்ளுதல் மிக எளிதாகிறது.

புரனவுன்சியேட்டர் தளத்தைப் பயன்படுத்த, உறுப்பினர் கணக்கு தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. உறுப்பினர் கணக்கு வைத்துக்கொண்டால், கூடுதல் வசதிகளைப் பெற முடியும். கொஞ்சம் ‘சின்சியரா’ உட்கார்ந்து படித்தால் ஆண்டிற்கு, குறைந்தது 5 மொழிகள் கற்றுக்கொள்வது சாத்தியமே

news courtesy: puthiya thalaimurai.

`ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!

 

நேதாஜி, 1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!

கடினமான (தகாத, கெட்ட) வார்த்தை.





http://farm8.staticflickr.com/7183/6846078948_0eaae1daa0_m.jpg
ஒருமுறை சென்னை கடற்கரையில்
ஒரு பொதுக்கூட்டத்தில் இரண்டு மணி நேரம்
அண்ணல் காந்தியடிகள் பேசினார்.

அவரைக் கண்டித்து
பாரதியார் ஒரு கடிதம் எழுதினார்.

"Mr. Gandhi' என்று அந்தக் கடிதத்தைத் தொடங்கி,
"நேற்று சென்னை கடற்கரை கூட்டத்தில்
நன்றாகப் பேசினீர்கள். ஆனால், உங்கள்
தாய்மொழியில் பேசியிருக்கலாம்.
அதை விடுத்து ஆங்கிலேயர்களை
விரட்ட வேண்டும் என்ற
எண்ணம் கொண்ட தாங்கள்
ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக
உள்ளது.' என்று கடிதத்தை முடித்திருந்தார்.

அதற்கு காந்தியடிகளின் பதில்...

"வணக்கம்.
உங்கள் கடிதத்தைப் பார்த்து
சிந்தித்துப் பார்த்தேன். ஆங்கிலேயரை
எதிர்க்கும் நான் ஆங்கிலத்தில் பேசியது
தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
மன்னிப்புக் கேட்கவும் தயார். ஆனால்,
நீங்கள் என்னைக் கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை
ஆங்கிலத்தில் எழுதியிருப்பது
வியப்பாக உள்ளது' என்று கடிதம் எழுதினார்.

அதற்குப் பதிலாக,
"நான் யாரையும் கண்டித்துக் கேட்கும்போது
எழுதுகின்ற கடினமான வார்த்தைகளை
தமிழில் எழுத விரும்பவில்லை.
அதனால்தான்
ஆங்கிலத்தில் எழுதினேன்' என்று மகாத்மா காந்திக்கு
பதில் கடிதம் எழுதியிருந்தார் பாரதியார்.

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!



நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்... குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

தகவல் அனுப்பியதற்கு நன்றி - மணிமாறன்.