இந்தியாவில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழை சீசனில்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடீஸ் எகிப்தி வகை கொசுதான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸை மனிதனுக்குப் பரப்புகின்றன. இவை, நாலு வாரங்கள் உயிர் வாழும். அதிகாலை நேரம், மாலை 4 மணி முதல் 7 மணி வரை இந்த வகைக் கொசுக்களுக்கு உணவு நேரம். மனிதனைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும். 2 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லக் கூடியவை. வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் மூடி, மூடப்படாத மேல்நிலை நீர்த்தொட்டிகளில் இனப்பெருக்கம் செய்யும். ஒரு கொசு 150 முட்டைகளை இடும். ஒரு வாரம் நீரில் பல்வேறு பருவங்களாக வளர்ந்து கொசுவாகப் பறக்கும்.
0 கருத்துரைகள்:
Post a Comment