நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, October 17, 2012

ஏடீஸ் எகிப்தி கொசுவின் கொடூரம்...



இந்தியாவில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழை சீசனில்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடீஸ் எகிப்தி வகை கொசுதான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸை மனிதனுக்குப் பரப்புகின்றன. இவை, நாலு வாரங்கள் உயிர் வாழும். அதிகாலை நேரம், மாலை 4 மணி முதல் 7 மணி வரை இந்த வகைக் கொசுக்களுக்கு உணவு நேரம். மனிதனைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும். 2 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லக் கூடியவை. வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் மூடி, மூடப்படாத மேல்நிலை நீர்த்தொட்டிகளில் இனப்பெருக்கம் செய்யும். ஒரு கொசு 150 முட்டைகளை இடும். ஒரு வாரம் நீரில் பல்வேறு பருவங்களாக வளர்ந்து கொசுவாகப் பறக்கும்.

மனிதனுக்கு அருகில் உள்ள நல்லநீர் நிலை தேக்கங்களில்தான் இவை முட்டை இடுகின்றன. 30 மி.லி. பெட்ரோல் அல்லது கெரசினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர்த்தேக்கங்களில் தெளித்தால் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம். இப்படி வாரம் ஒருமுறை செய்து வரவேண்டும். கிணறுகளில் கொசுக்களின் லார்வாக்களை விரும்பிச் சாப்பிடும் சின்ன சின்ன மீன்களை விட்டால் நல்லது.

எனவே, வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தாலே, லார்வா பருவத்திலேயே இந்த வகை கொசு அழியும். நாள்பட்ட தேவையில்லாத பொருட்களை வீட்டின் உள்ளே - வெளியே போட்டு வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, உடல் முழுவதும் மறைக்கும்படியான ஆடைகள் அணிவது, கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச்சுருள் போன்ற கொசு விரட்டிகள் பயன்படுத்தலாம்.

- ஆர்.பி.
ஜூனியர் விகடனில் இருந்து

0 கருத்துரைகள்:

Post a Comment