நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Friday, May 11, 2012

தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் பகுதி – III



அணுவின் அளவைச் சொல்லாத காலத்தின் போது தமிழன் நீட்டல் அளவை வாய்ப்பாடு சொல்லி வைத்துள்ளான்.

8 அணு – 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் – 1 பஞ்சிழை
8 பஞ்சிழை – 1 மயிர்
8 மயிர் – 1 கடுகு
8 கடுகு – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 நெல்
8 நெல் 1 பெருவிரல்
12 பெருவிரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 கோல்
500 கோல் – 1 கூப்பிடு
4 கூப்பிடு – 1 காதம்


கம்பன் காட்டும் எண்ணளவை இன்றைய கணிதவியலறிஞர்கள் இதனை அளவிட்டுரைக்க முடியாது என்கின்றனர். தமிழ் மொழி எண்களையும் வடமொழி எண்களையும் “பிங்கலந்தை” எனும் நிகண்டு நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம்
குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம்
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம்
சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம்.

அறிவியலின் தாக்கம் தொடர்ந்து வரும் இலக்கிய பரிணாமத்தினூடே கலந்து வந்தன. மேலும் இது போன்ற எண்ணற்ற அறிவியற் செய்திகள் இலக்கியத்தில் நிறைய உள்ளன. இக்காலம் அறிவியல் எனும் பாற்கடலை அப்படியே அள்ளிக் குடித்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கு தமிழ் இலக்கியம் நிச்சயம் துணை நிற்கும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

0 கருத்துரைகள்:

Post a Comment