நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

உண்மையான சுதந்திர இந்தியா...

பாலுக்கு அழும் குழந்தை..
கல்விக்கு ஏங்கும் மாணவன்..
வேலை தேடும் இளைஞன்..
வறுமையில் வாடும் தாய்..
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுதந்திர இந்தியா...
- மாவீரன் பகத்சிங்

மாணவர்களிடம் குறையும் கல்வித் திறன்...

மாணவர்களிடம் குறையும் கல்வித் திறன்...

இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைதான் உயர்கிறது. ஆனால் அவர்களது கல்வித் திறன் குறைந்து கொண்டே வருவதாகக் கூறும் ஆய்வை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.

6 முதல் 14 வயது உடைய மாணவர்களுக்கு புத்தகங்கள் படிப்பதிலும், கணிதத்திலும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது, தனியார் டியூஷன்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளியில் மாணவர்களின் வருகைப் பதிவும் குறைந்துள்ளது என்கிறது அந்த ஆய்வு.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கல்வித்திறன் குறித்து ஆய்வு நடத்தி கல்வித்திறன் அறியும் ஆண்டறிக்கை (ஏஎஸ்இஆர்) சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2011ம் ஆண்டு இந்தியாவில் கல்வித் திறன் எவ்வாறு இருந்தது என்பது குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார். அதில், துவக்கப் பள்ளிகளிலேயே கணினியை பயன்படுத்தும் முறை உயர்ந்துள்ளது. இந்தியாவில் 30% துவக்கப் பள்ளிகளில் கணினிப் பாடம் இடம்பெற்றுள்ளது. கேரளாவில் இது அதிகமாக (78.4%) உள்ளது. தமிழகத்தில் 51% அளவிற்குத்தான் கணினி பயன்பாடு உள்ளது. அதிலும் 7% அரசு பள்ளிகளில் மட்டுமே கணினி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல, கடந்த ஆண்டைக் காட்டிலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக மாணவிகளின் விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் (89.7%), இந்த ஆண்டில் (94.8%) உயர்ந்துள்ளது. அதிக மாணவிகள் சேர்க்கை உள்ள மாநிலங்களாக பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகியவை முன்னிலையில் உள்ளன. உத்திரப்பிரதேச மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பதாகும். அதாவது, 2006ம் ஆண்டில் 18.7% இருந்த எண்ணிக்கை தற்போது 25.6% உள்ளது. கேரளா, மணிப்பூர் மாநிலங்களில் 60% மாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றனர்.

இந்திய அளவில் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவும் 73.4% இருந்து 70.9% குறைந்துள்ளது. அதே சமயம், ஆசிரியர்களின் வருகைப் பதிவு 87% சதவீதமாக உயர்ந்துள்ளது.

தனியார், அரசு பள்ளிகள் என எந்த வித்தியாசமும் இன்றி டியூஷன் வகுப்புகள் அதிகரித்துள்ளன. 20% முதல் 25% மாணவர்கள் தனியாக பணம் செலுத்தி டியூஷன் வகுப்பில் சேர்கின்றனர். ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், கேரளாவில் டியூஷன் வகுப்புகள் அதிகமாக நடக்கின்றன.

இறுதியாக, கவலைக்குரிய அந்த தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, குழந்தைகளின் கற்கும் திறன் குறைந்து வருகிறதாம். அதாவது 2010ம் ஆண்டில் எடுத்த ஆய்வில் 5வது படிக்கும் ஒரு மாணவரால் 2ம் வகுப்பு புத்தகத்தை படிக்கும் திறன் 53.7% இருந்தது. இந்த திறன் தற்போது 48.2% குறைந்துள்ளது. விதிவிலக்காக குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் கல்வித் திறன் உயர்ந்துள்ளது சற்று நிம்மதியை அளிக்கிறது.

14 வயதுள்ள குழந்தைகளுக்கு கணிதக் குறியீடுகள் மிகக் கடினமாக இருப்பதும், 3ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், பக்கத்து எண்ணில் இருந்து கடன் பெற்று கழிக்கும் கணிதத்தை போடும் திறன் குறைந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே கணிதத்தை 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செய்யும் திறனும் 70.9% இருந்து 61% குறைந்துள்ளது. இதிலும், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மாணவர்களின் கணிதத் திறன் உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கல்வித் தரத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கற்கும் திறனை ஊக்குவிக்கும் விதத்தில் பாடப்புத்தகங்களும், ஆசிரியர்களும், வகுப்பறைகளும் மாற வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.

இதையும் அறிந்துகொள்வோம் ...

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை.
முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

.. எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

தமிழ்நாட்டின் சிறப்புகள்.........

தமிழ்நாட்டின் சிறப்புகள்.........
****************************

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

... 2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....

ஒரு நாள் அட்டவணை :

(உயர்தர?) தனியார் பள்ளிகள் 100/100 எடுக்கும் முயற்சியில் பிழிந்தெடுக்கிறார்கள். பத்தாவது, பிளஸ் 2 படிக்கிற மாணவ மாணவிகள் ஒரு நாள் அட்டவணை :

1. அதிகாலை மூன்று மணிமுதல் ஆறு மணிவரை - முழுக்க முழுக்க மனப்பாடம் / ஒப்புவித்தல்.(கெமிஸ்ட்ரி, பயாலஜி மனப்பாடம் செய்ய்யப்படுவதை சற்றே நினைத்துப்பாருங்கள்).

2. பள்ளியில் செய்ய்யப்படும் கொடுமை தெரியும். தன் மகனையோ மகளையோ திடீரென உடல் நிலை சரியில்லைஎன்று போன் வந்தால் அழைத்துவரப்போயிருக்கிறீர்களா? இப்போது காட்சிகளை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். வகுப்பு வாசலில் பெண்ணென்றும் பாராமல் முட்டிப்போட்டு படித்துக்கொண்டிருப்பது, வகுப்பறைகளைக் கடக்கும் தருணங்களில் ஸ்கேலால் விளாசும் சத்தம், போதாக்குறைக்கு பிரேயர், என்சிசி என்று கிரவுண்டில் நிற்க வைப்பது, வெயிலில் ஓடவிட்டு தண்டனை கொடுப்பது, சக மாணவர்கள் முன்னால் அவதூறாகப் பேசி அடிப்பது, பெற்றோர்களை வரவழைத்துத் திட்டுவது...

3.வியர்வையில் தொப்பையாய் நனைந்து பள்ளி வேனிலிருந்து வெளியில் விழுந்தவுடன் டியூஷன்களுக்கு ஓடவேண்டும்..

4. பேனா மை தீர்ந்துபோகக்கூடிய அளவுக்கு ஹோம் வொர்க் எழுத வேண்டும். எழுதிக்கொண்டே பெற்றோர்களிடம் தினந்தோறும் பூசை வாங்க வேண்டும்.

5. திரும்பவும் அதிகாலை மூன்று மணி.

மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். இல்லை என்பீர்களா?

100க்கு 90 சதவீதத்தினர் சந்தோஷமான மன நிலையில் பள்ளிக்கூடம் செல்லவில்லை; சந்தோஷமாகவும் வீட்டுக்கு வருவதில்லை.

மதிப்பெண் துறத்தும் மன அழுத்தத்தால், தனியார் பள்ளிகள்தான் நல்வாழ்வு பெறும்!

கூடவே கொலைகளும் கொலைகளும் அதிகரிக்கும்!!

"ரத்தவெள்ளத்தில் ஆசிரியை பிணமும், கொலைகாரனாக ஒரு குருத்தும்!"

நாம் வாழும் புற சூழல்தான், கருத்து,சிந்தனை,பண்பாடு-கலாட்ச்சாரம் இவைகளின் உருவாக்க களம்.இது பல கட்டங்களாக மாறியும்,வளர்ந்துகொண்டுமே வந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் அல்லவை நீடித்தும் அல்லாதவை கழிந்துமே இந்த வளர்ச்சி இருந்துகொண்டு இருக்கிறது.அது தானாக நிகழ்வதில்லை என்பதும் மனிதன் அதன் மீது தனது இயக்கு சக்தியை செலுத்துகிறான் என்பதும் உண்மை.
இன்று நாம் வாழும் சூழல்,உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் என்கிற உற்பத்தி-பரிவர்த்தனையை நோக்கிய ஒருங்கிணைந்த உலகமாக மாற்றும் முயற்சின் காலம் இது.இந்த முயற்சியில் பொருளாதார தாக்குதல்களை சந்திக்கிறோம்,அரசியல்தரம் மேலும்-மிகமேலும் சீரழிந்து நம்மீது ஏறி மிதிப்பதை சந்திக்கிறோம்,நமது போற்றுதலுக்கு உரிய கூட்டுக்குடும்ப உறவுகள் கொஞ்சம்-கொஞ்சமாக குறைந்து வருவதை சந்திக்கிறோம், முழுமையாக திறந்துவிடப்பட்ட கதவுகளின் வழியே மேற்கத்திய நுகர்வு கலாச்சாரமும், நாம் உள்வாங்க முடியாத (ஒவ்வாமை ஏற்படுத்துகிற) பண்பாட்டு தாக்குதல்களை சந்திக்கிறோம்,
இவைகள் அனைத்தும் நடுத்தர வர்க்க பகுதியினர்-கருத்தால்-கரத்தால் உழைக்கும் பகுதியினரை நாளைய நிலை என்ன என்று கானல் நீரை நோக்கி ஓடும் மான்களைப்போல் ஒட்டவைத்துக்கொண்டு இருக்கிறது.இவைகளின் மன அழுத்தம், ஆன்மீக-லௌகீக-வணிக-மற்றும் கல்வி,சுகாதாரம்,தொழில் உற்பத்தி உறவுகள் அனைத்திலும் மோசடியாளர்கள்-சமூகவிரோதிகள் இவர்களிடம் தஞ்சம்புக வைக்கிறது. தரம்தாழ்ந்த-மோசடி அரசியல்வாதிகள்,லஞ்சத்திற்கும்,ஊழலுக்கும் வழிகாட்டும் அதிகார வர்க்கத்தினர்,சாமியார்கள் பிழைக்க தெரிந்தவர்கள் என்றும்,நேர்மையான அரசியல்வாதிகளும்,அதிகாரவர்க்க பகுதியினரும் பிழைக்கத்தெரியாதவர்கள் என்று அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகின்றனர்.நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் அரசியலை - அது சாக்கடை என்று மக்களை ஒதுங்க செய்கிறது.
இவை அனைத்தும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும்,அனைத்தையும் லாபம் கொழிக்கும் தொழிலாக பாவிப்போரிடமிருந்து ஊழியர்களுக்கும் மன அழுத்தங்களாக ஏறி அமுக்குகிறது.வன்முறை-அடிதடி-ஒருதனி மனிதன் 100 பேரை ரத்தம் காக்க அடித்து சாகாடிப்பது,கொலைவெறி பாடல்களும்,குத்துப்பாடல்களும் கொண்டாட்டம் போடுவது இவைகளும்,பெண்ணுக்கு பணம் கொடுத்து பரிசம் போடுதல் என்பது மாறி வரதட்சணைகள் என்று திருமணங்களையும் வியாபாரமாக்கி இருப்பது, பெண்களை சிசுவிலேயே கொலை செய்வது இதுபோன்ற சமூக சீர்கேடுகள் அதிகரித்து தொடர்வாது இவை அனித்தும் இன்னும் பலவும் நாம் வாழும் சமூக சூழல். இவைகளுக்கு மிகப்பெரும் பங்குதான் ஒரு தளிரை கொலைகாரன் ஆக்கிஇருக்கிறது.தாய்க்கு ஈடான ஒரு ஆசிரியை கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்.
நமது வெறுப்பும்,கோபமும் இந்த சீரழிந்த சமூகம்-வியாபாரமாக்கப்பட்ட கல்விமுறை இவற்ற்றை மாற்ற வேண்டும் என்ற உந்து சக்தியாக இருக்குமானால், அதுவே அந்த தளிருக்கு நாம் கட்டும் பரிவும், தாயாகிய அந்த ஆசிரியைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கமுடியும்..