நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Thursday, March 22, 2012

வட்டத்தின் சுற்றளவினை மட்டுமல்ல பரப்பளவையும் கூட முதலில் கண்டவர்கள் தமிழர்கள் தான்.

கணக்கதிகாரம்:

வட்டத்தின் சுற்றளவினை மட்டுமல்ல பரப்பளவையும் கூட முதலில் கண்டவர்கள் தமிழர்கள் தான்..

கணிதம் உலகை மட்டுமல்ல அனைவரின் உள்ளதையும் ஆளும். ஈடுபாடு ஒன்று போதும். ஈடுபட்டால் கணிதமே உலகமாகும். அந்த கணிதம் என்ற விடயத்தில் தமிழர் என்ற வகையிலே நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

வட்டத்தின் சுற்றளவினை முதலில் கண்டவர்கள் தமிழர்கள் தான் என்பதை முந்தையப் பதிவிலே கண்டோம். வட்டத்தின் சுற்றளவு மட்டுமல்ல பரப்பளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான பரப்பளவை காக்கைப்பாடினியம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த காக்கைப்பாடினியார். (தொல்காப்பியர் காலம் எனபது கி.மு.711 ஆகும்.) இவர் எழுதிய அற்புதமான கணித நூல் “ காக்கைப்பாடினியம்” ஆகும். இதில் வட்டதிற்கான பரப்பளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

"வட்டத்தரை கொண்டு விட்டத்தரை
தாக்க சட்டெனத் தோன்றும் குழி"

என்ற பாடல் மூலம் வட்ட வடிவ நிலத்தின் பரப்பளவை காணும் முறைகளை விளக்குகிறார். இந்த பாடல் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் கணக்கதிகாரத்தில் 46 மற்றும் 49 ஆம் பாடல்களாக வந்துள்ளன.

கணக்கதிகாரம் பாடல் 46:

"வட்டத்தரை கொண்டு விட்டத்தரை
தாக்க சட்டெனத் தோன்றும் குழி"

விளக்கம்:

வட்டத்தரை = வட்டத்தின் சுற்றளவு / 2 = 2πr/2 = πr

விட்டத்தரை = விட்டம் / 2 = 2r/2 = r
குழி (பரப்பு ) = வட்டத்தரை X விட்டத்தரை ( தாக்க=பெருக்க)
∴ வட்டத்தின் பரப்பு = πr x r = πr2

பாடல்: 49

"விட்டத்தரை கொண்டு வட்டத்தரை
தாக்க சட்டெனத் தோன்றும் குழி"

மேற்கூறிய விளக்கமே இதற்கும் போதுமானது.

இன்னமும் உண்டு கணக்கதிகாரத்தின் பெருமை. அதனை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment