நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Thursday, March 22, 2012

மலர்களின் பருவப் பெயர்:


சங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அறிஞர்களின் பார்வையில் 103 வரை நீள்கிறது. சில மலர்களின் பெயர்கள் அம்மலரைப் பற்றிய விளக்கத்துடன் அமைந்துள்ளது. மேலும் மனிதர்களுக்கு எப்படி பருவங்களை புலவர்கள் வகுத்தனரோ அப்படியே மலர்களுக்கும் வகுத்துள்ளனர்..

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

(1) அரும்பு - அரும்பும் தோன்றுநிலை
(2) நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
(3) முகை - நனை முத்தாகும் நிலை
(4) மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" -
திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
(5) முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
(6) மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
(7) போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும்
புடைநிலை
(8) மலர்- மலரும் பூ
(9) பூ - பூத்த மலர்
(10) வீ - உதிரும் பூ
(11) பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
(12) பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
(13) செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம்
பெற்று அழுகும் நிலை.
 

0 கருத்துரைகள்:

Post a Comment