நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

தாய்மொழி பேசு...

நீமட்டும் உன்னியல்பு எங்கனம் மறந்தாய் தமிழா?!...
தாய் மொழியை துச்சமென்றா துறந்தாய் தமிழா?!...
தாய்மொழி பேசு
குயில்கள் இரண்டு சந்திக்கையில் குக்கூவென்று கூவக்கேட்டேன்
காகம் இரண்டு சந்திக்கையில் காக்காவென்று கரையக்கேட்டேன்
எந்நாளும் அவை இந்நிலை மாறாதிருக்கக் கண்டேன்
எத்தேசம் சென்றிடினும் எந்நாளும் இதையே கண்டேன்.

நீமட்டும் உன்னியல்பு எங்கனம் மறந்தாய் தமிழா?!...
தாய் மொழியை துச்சமென்றா துறந்தாய் தமிழா?!...
சென்னையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹவ் ஆர் யூ”, என்றாய்
மும்பையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹைசே ஹை”, என்றாய்.

தாய் மொழி பேசுவது தவறென்றா நினைத்தாய்?...
உன் தாய்க்கே இழிநிலையை ஏன் கொடுத்தாய்?...
இரவல் சட்டை அணிவதை பெருமையென்றா நினைத்தாய்
கந்தலானாலும் சொந்தச்சட்டை பெருமை யென்பதையெப்படி மறந்தாய்.

உப்பிட்டாரை மறப்பதுவே தவறென்று எண்ணும் போது
உயிராய் உணர்வுதந்த தாய்மொழி மறப்பது சூது
உணர்வின்றி உயிர் இருப்பதில் என்ன மேன்மை
உணராது தாய்மொழி மறந்திட்டால், தமிழாநீ பொய்மை.

- சாரதாதேவி முத்துராமலிங்கம்

0 கருத்துரைகள்:

Post a Comment