நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்குங்கள்

ஏழை மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுத்து தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும். அப்படி செய்தால் நமது இந்தியா அபரிதமான வளர்ச்சி பெறும். இதில் ஏழை மாணவர்கள் யார் யார் என்பதை தெளிவுபடுத்த விரும்பிகிறேன். சாதி, இனம், மொழி, மதம் என எந்த வேறுபாடின்றி எந்தப் பெற்றோரால் தன் குழந்தையைப் படிக்க வைக்க முடியவில்லையோ, அந்தக் குழந்தைகள் அனைவரும் ஏழைக்குழந்தைகளே. மத்திய, மாநில அரசுகளே எங்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம். பாரபட்சமின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்குங்கள் அதுபோதும்.

0 கருத்துரைகள்:

Post a Comment