நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Tuesday, April 3, 2012

இயற்கையிடம் நாம் கற்றுகொண்டது...


1. நாம் பறவையிடம் கற்றுகொண்டோம் விமானத்தில் பறக்க. ஆனால் இனறு 1253 பறவை இனங்கள் அழியக்கூடிய இடத்தில் இருகின்றன.


2.புலிகளிடம் நாம் கற்றுகொண்டது போர்புரியும் சமயத்தில் நம் வீரர்கள் அணியும் ஆடை. எதிரிகள் கண்களில் பட்டுவிடாமல் இருக்கக்கூடிய வித்தை. (புலிகள் வேட்டையாடும் பொது அதன் தோல் மரங்களுடன் நிறத்துக்கு ஒத்துபோயவிடும் ஆகையால் மான்கள் புலியை எளிதாக கண்டுகொள்ளமுடியாது)
ஆனால் இன்று இந்த உலகத்தில் மிஞ்சி இருக்ககூடிய புலிகள் 7400.

3. நாம் மீன்களிடம் கற்றுகொண்டது நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. ஆனால் இன்று மனிதன் அறிந்த 3000 மீன் இனங்கள் அழிந்துவிட்டன.


4. நாம் பூச்சிகளிடம் கற்றுகொண்டது இரவில் எளிதாக பார்க்ககூடிய கண்கன்னாடிகள். ஆனால் இன்று மனிதன் அறிந்த 600 பூச்சி இனங்கள் அழிந்து விட்டன.


கடவுள் கொடுத்த வரம் இயற்கை. நாம் இந்த இயற்கையில் கற்றுக்கொள்ள ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. ஆனால் அவைகளை மறைமுகமாக கொன்று குவிக்க மனிதனுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

நன்றி: திரு.சந்தோஷ்


0 கருத்துரைகள்:

Post a Comment