நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Thursday, April 12, 2012

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ....



அன்பின் உறைவிடமாய் இருந்து இன்றும் புதுவையில் ஆத்ம ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஸ்ரீ அன்னையை வேண்டி கங்கை அமரன் அவர்கள் இசையமைத்து பாடிய பாடல் இது .எத்தனை முறை கேட்டாலும் நெஞ்சை வருடும் இப்பாடலைக்  கேட்டு மலர் போன்ற மனதைப் பெறுங்கள் .

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே


ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே
நதி காய நேராமல் நீரூற்று தாயே
நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே
என் வளமான தாயே
பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே    -(மலர் போல)


புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
பொன் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே          -(மலர் போல)

நன்றி.-பாலா...

0 கருத்துரைகள்:

Post a Comment